வீரப்பன்: மிர்ஜி வாக்குமூலம்
தருமபுரி:
வீரப்பன் கொலை குறித்து விசாரிக்கும் தருமபுரி கோட்டாட்சியர் பிரகாசத்திடம் கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் ஜோதிபிரகாஷ் மிர்ஜிஇன்று வாக்குமூலம் அளித்தார்.
கடந்த அக்டோபர் 18ம் தேதி தருமபுரி பாப்பாரப்பட்டி சாலையில் செல்லியம்பட்டி தொழுநோய் மறுவாழ்வு இல்லம் அருகேவீரப்பனையும் அவனது கூட்டாளிகளும் தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச் சம்பவம் குறித்து விசாரிக்குமாறு தருமபுரி கோட்டாட்சியர் பிரகாசத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 1ம்தேதி முதல் அவர் விசாரித்து வருகிறார்.
முதலில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, உறவினர்கள், பொதுமக்களிடம் விசாரணை நடத்திய அவர் நவம்பர் 25-ம் தேதி முதல் அதிரடிப்படையினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழக அதிரடிப் படைத் தலைவர் விஜயகுமார், செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் அவரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக அதிரடிப் படைத் தலைவர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி, துணை காவல்துறை கண்காணிப்பாளர் திம்மையா உட்பட 4 பேர்இன்று வாக்குமூலம் அளித்தனர்.
அடுத்து வீரப்பன் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் சேலம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனை மருத்துவர் வள்ளிவிநாயகம் தலைமையிலான மருத்துவக் குழுவினர்ஆர்.டி.ஓ. முன்பு ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .












Click it and Unblock the Notifications