இலங்கை: 26 மீனவர்கள் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 26 தமிழக மீனவர்கள் சென்னைக்கு விமானம் மூலம்வந்தனர்.
ராமேஸ்வரம், புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள்இலங்கை கடற்படையினரால் பல்வேறு சம்பவங்களின்போது பிடித்துச் செல்லப்பட்டனர்.
இவர்களை மீட்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர்நட்வர்சிங் ஆகியோருக்கு பலமுறை கடிதங்கள் எழுதியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது 26 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். மீனவர்களை அதிகாரிகள் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications