உலகெங்கும் கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம்
வாட்டிகன்:
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாட்டிகன் நகரில் போப் இரண்டாம் ஜான் பால் உலகஅமைதிக்காக மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார்.
வாட்டிகனில் புகழ் பெற்ற புனித பீட்டர் சதுக்கத்தில் ஆல்ப்ஸ் மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட 32 மீட்டர் உயர கிறிஸ்துமஸ் மரம்நிறுவப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பல மணி நேரங்கள் வரிசையில் நின்று தீவிர சோதனைக்குப் பின் நள்ளிரவு பிரார்த்தனைக்குவாடிகன் தேவாலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நள்ளிரவில் போப் தனது ஜன்னல் வழியாக மக்கள் முன் எழுந்தருளினார். அவர் கையில் வைத்திருந்த மெழுகுவர்த்தியால் சிலுவைக்குறியிட்டார். மக்கள் ஆராவார கைதட்டல் எழுப்பினர்.
பின்பு போப் நடத்திய பிரார்த்தனையில் கர்த்தரே, பிரச்சனைகளிலும் சிக்கல்களிலும் தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் உனதுதேவையை உணர்ந்துள்ளனர். எங்களுக்கு பாவ மன்னிப்பு அளிக்க சொர்க்கத்தில் இருந்து வந்தவரே, எப்போதும் எங்களுடன் இருக்கவும்என்று வேண்டினார்.
கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீருடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் போப்பாண்டவருடன் இணைந்து வழிபட்டனர்.
இயேசு பிறந்த இடமான ஜெருசலேமில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஏராளமானவெளிநாட்டவர்களும், பாலஸ்தீனர்களும் ஜெருசலேமிற்கும் பெத்லஹேமிற்கும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியா முழுவதிலும் கிறிஸ்துமஸ் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் நள்ளிரவு பிரார்த்தனையுடன்கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications