விஜயேந்திரரிடம் போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்:
காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரரிடம் இன்று காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கு முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. ஜெயேந்திரர் உள்ளிட்ட 23 பேர் கைதாகியுள்ள நிலையில் இளையசங்கராச்சாரியார் விஜயேந்திரரிடம் இன்று காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் பூஜைகள் நடத்தவேண்டியிருப்பதால் அது முடிய 2 மணி ஆகி விடும் என்று விஜயேந்திரர் தரப்பில் எஸ்.பி. பிரேம்குமாரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பூஜைகளை முடித்த பிறகு 2 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜயேந்திரருக்கு பிரேம்குமார் உத்தரவிட்டார்.
அதேபோல் பிற்பகல் விஜயேந்திரர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீஸார் 75 நிமிடங்கள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் எப்போது வர வேண்டும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவரிடம்போலீஸார் கூறினார்கள்.
காஞ்சி மடத்தின் வழக்கறிஞர் தியாகராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், துணைக் கண்காணிப்பாளர் சக்திவேல் விஜயேந்திரரிடம்விசாரணை நடத்தினார். கடல் கொந்தளிப்பு பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் சென்றுவிட்டதால்,விஜயேந்திரரை மீண்டும் மடத்திற்கு செல்ல சக்திவேல் அனுமதித்தார்.
விசாரணை நடந்த இடத்தில் விஜயேந்திரர் தனது தம்பி ரகுவை சந்தித்தார். ரகு கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பது குறித்துஎனக்குத் தெரியாது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications