எங்கும் கண்ணீர், கதறல், பிணங்கள்!
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் முழுவதும் பெரும் அதிர்ச்சியும் சோகமும் பரவிக் கிடக்கிறது.
தென் சென்னையின் கடலோரப் பகுதிகளான மயிலாப்பூர், சாந்தோம், திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில்பெரும் சீரழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்டோரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகள் அனைத்திலும் மக்கள் வெள்ளமாக காணப்படுகிறது. யாரைப் பார்த்தாலும் சோகத்துடன் காணப்படுகின்றனர். அரசுமருத்துவமனைகளில் பிணக் குவியல் சேர்ந்து வருகிறது. பலர் குழந்தைகளை இழந்து பரிதவிக்கின்றனர்.
பலருடைய வீடுகள் கடல் நீல் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால் மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணாமலை புரம், சாந்தோம் பகுதிபிளாட்பாரங்களில் குடும்பத்துடன் கண்ணீருடன் அமர்ந்துள்ளனர். வீடும், பொருட்களும் பறிபோய் விட்டதால் அவர்களது நிலை மிகமோசமாகியுள்ளது.
அரசு அதிகாரிகள் சரியான மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை, பரிதவிப்போருக்கு சரியான முறையில் உதவவில்லை என்றுஅவர்களில் பெரும்பாலானவர்கள் குமுறல் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications