அலைக்கழித்த போலீஸ்: அய்யர் மருமகன் புகார்
சென்னை:
விசாரணை என்ற பெயரில் போலீஸார் என்னை 2 நாட்களாக அலைக்கழித்து விட்டனர் என்று சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரின்மருமகன் அனந்தநாராயணன் தெரிவித்துள்ளார்.
சுந்தரேச அய்யரின் மருமகன் அனந்த நாராயணன், சங்கர மடத்திற்குச் சொந்தமான சென்னை நுங்கம்பாக்கம் குழந்தைகள் அறக்கட்டளைமருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
அவரிடம் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை குறித்து அனந்த நாராயணன் தெரிவிக்கையில்,
வியாழக்கிழமை 2 போலீஸார் நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்து என்னை சந்தித்தனர். சங்கரராமன் கொலை வழக்குதொடர்பாக விசாரணைக்கு வருமாறு அழைத்தனர்.
பின்னர் அவர்களுடன் நான் சென்றேன். என்னை முதலில் மயிலாப்பூருக்குக் கொண்டு சென்றனர். பின்னர் பாரிமுனைக்குக் கூட்டிச்சென்றனர். போலீஸ் குழுவில் ஒரு இன்ஸ்பெக்டரும் இருந்தார். அதன் பின்னர் என்னை காஞ்சிபுரம் அழைத்துச் சென்றனர். வியாழக்கிழமைஇரவு 8.15 மணி வரை விசாரணை நடந்தது.
அதன் பின்னர் நான் சங்கர மடம் சென்று அங்கு இரவில் தங்கினேன். பின்னர் வெள்ளிக்கிழமையும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணை என்ற பெயரில் போலீஸார் என்னை பல விதங்களிலும் அலைக்கழித்தனர் என்றார் அனந்த நாராயணன்.












Click it and Unblock the Notifications