ராமநாதபுரத்தில் சூறைக்காற்று: மக்கள் வெளியேற்றம்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் அந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் நடராஜபுரம், முத்துராமலிங்கபுரம், ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராமங்களில் பலத்த சூறைக் காற்றுவீசி வருகிறது. நேற்று இரவு லேசான கடல் கொந்தளிப்பும் காணப்பட்டது.
இதனால் இக்கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர். மூட்டை, முடிச்சுகளுடன் அவர்கள் வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications