நெஞ்சு வலி: மருத்துவமனையில் அப்பு
கடலூர்:
கூலிப் படைத் தலைவன் அப்புவுக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளான்.
சங்கரராமன் கொலை வழக்கில் 3வது குற்றவாளியான அப்பு போலீஸ் விசாரணைக்குப் பின்னர் கடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அங்கு அவருக்கு நேற்றிரவு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து சிறை மருத்துவர்கள் அவனை பரிசோதித்தனர். அவனுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாகடாக்டர்கள் கூறியதையடுத்து அப்புவை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் போலீஸார்.
அங்கு அவன் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டான். அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
அவன் வைக்கப்பட்டுள்ள வார்டை சுற்றிலும் ஆயிதம் தாங்கிய 50 போலீசார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்புவின் உடல் நிலையைப் பரிசோதிக்க சென்னையில் இருந்து ஒரு மருத்துவக்குழுவும் கடலூர் விரைகிறது.
இதற்கிடையே, ரவி சுப்ரமணியத்தின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவன் இன்று மாலைகாஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறான்.
விஎச்பியின் கோரிக்கை:
கொல்லப்பட்ட சங்கரராமன் குடும்பத்துக்கு வழங்கப்பட்டதைப் போல சுனாமி கடல் அலைகளால்உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர்ஜெயலலிதாவுக்கு விஸ்வ இந்து பரிஷத் மாநிலத் தலைவர் வேதாந்தம் கோரியுள்ளார்.