தெற்காசியாவில் பலி எண்ணிக்கை 1.5 லட்சமானது
ஐநா சபை:
தெற்காசியாவில் சுனாமியால் பலியானவர்கள் எண்ணிக்கை 1.5 லட்சத்தை எட்டி வருவதாக ஐ.நா. சபை கூறியுள்ளது. இதில்இந்தோனேஷியாவில் மட்டும் 1 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
![]() |
ஐநா சபையின் அவசரகால மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜேன் எகலெண்ட் இதைத் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தோனேஷியாவின் ஏசெக் மாகாணத்தில் தான் மிக அதிகமான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. மொத்தத்தில் தெற்காசியா முழுவதும்1,50,000 பேர் பலியாகியுள்ளனர். ஏசெக் பகுதியில் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாகக் கூடஇருக்கலாம். அந்த எண்ணிக்கை கடைசி வரை நமக்குத் தெரியாமல் கூட போகலாம்.
இதனால் சாவு எண்ணிக்கை கூடுதலாகத் தான் இருக்கும். பெயரில்லாத பல மீனவ கிராமங்கள் தெற்காசியாவில் அழிந்து போயிருக்கின்றன.அவற்றில் வசித்து சுனாமிக்கு பலியானவர்கள் கணக்கிலேயே வரலாமல் போய்விட வாய்ப்புண்டு என்றார்.
இதற்கிடையே இந்தோனேஷிய நலத்துறை அமைச்சர் சிதி பதிலா கூறுகையில், பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைஎட்டியிருக்கலாம் என்று நினைக்கிறோம். நாங்கள் இனிமேல் எண்ணிக்கையை சொல்லப் போவதில்லை. காரணம் அது உண்மையானஎண்ணிக்கையாக இருக்கப் போவதில்லை.
மேற்கு சுமத்ராவில் பலியானவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!













Click it and Unblock the Notifications