For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ. 250 கோடி ஒதுக்கீடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jaya gives relief fund to man
சுனாமி பாதிப்பு நிவாரணத்திற்காக மத்திய அரசு ரூ. 250 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்திற்கு அவசர உதவியாக ரூ. 250 கோடியை ஒதுக்க தான் உத்தரவிட்டுள்ளதாகபிரதமர் மன்மோகன் சிங் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

மத்திய நிதியுதவியின் முதல் கட்டம்தான் இது. முழுமையான ஆய்வு முடிந்த பின்னர் அடுத்த கட்ட நிதியுதவி அளிக்கப்படும் என்றும்பிரதமர் தெரிவித்தார்.

அப்போது, அவசரமாக 10,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணை தேவைப்படுவதாக பிரதமரிடம் தெரிவித்தேன். அவை நிச்சயம்வழங்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார். தமிழக அரசின் தேவைகள் அனைத்தும் துரித கதியில் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர்உறுதியாகத் தெரிவித்தார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

இதேபோல புதுவை மாநிலத்திற்கு முதல் கட்டமாக ரூ. 50 கோடி நிவாரண நிதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X