For Quick Alerts
For Daily Alerts
Just In
மீனவர்களின் கடன்களை ரத்து செய்க: கருணாநிதி
சென்னை:
மீனவர்களின் கடன்களை ரத்து செய்து அவர்கள் மீண்டும் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவ வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில்,
சுனாமி அலைத் தாக்குதலில் மீனவர்களின் படகுகள், மீன் பிடி வலைகள் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்துள்ளன. எனவேமீனவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீன்பிடித் தொழிலில் மீண்டும் ஈடுபடுத்த மத்திய அரசு உதவிசெய்ய வேண்டும்.
மீனவர்களின் கடன் தொகைகளை ரத்து செய்ய வேண்டும். அவர்களை அகதிகளாகக் கருதி வீடு, படகுகள், மீன்பிடி வலைகள்உள்ளிட்டவற்றை வழங்கி அவர்கள் புதுவாழ்க்கை தொடங்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Comments
chennai tamil nadu jayalalitha news fishermen relief assistance nagapattinam relief fund victims tremor rocks clothes
Story first published: Sunday, January 2, 2005, 5:30 [IST]