நிவாரண உதவிகளை தடுக்காதீர்: சிபிஎம் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் வழங்கும் நிவாரண உதவிகளை அதிகாரிகள் தடுக்க வேண்டாம் என்று உத்தரவிடுமாறு தமிழகஅரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், நிவாரணப் பணிகளைஒருங்கிணைப்பது என்ற பெயரில் தனியார்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கக் கூடாது. அரசு மூலம் மட்டுமேசெய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இந்தத் தடையால் நிவாரணப் பணிகள் தடைப்பட்டுள்ளன. எனவே முதல்வர் ஜெயலலிதா இப்பிரச்சினையில் தலையிட்டு, யார்வேண்டுமானாலும் நிவாரண உதவிகளை வழங்கலாம் என்று உத்தரவிட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications