குடும்பத்தினர் 32 பேரை தேடும் மருத்துவமனை ஊழியர்
போர்ட்பிளேயர்:
![]() |
சுனாமி அலை தாக்குதலில் காணாமல் போன தனது குடும்பத்தினர் 32 பேரைத் தேடிவரும் அதே வேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்குத்தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார் கார் நிக்கோபார் மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர்.
கார் நிக்கோபார் பகுதியில் உள்ள ஜே.பி. பந்த் மருத்துவமனையில் கிளர்க்காகப் பணிபுரிபவர் அப்துல் குத்தூஸ். கடல் கொந்தளிப்பு நிகழ்ந்ததினத்தன்று இவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
அன்றைய தினம் சுனாமி அலைகள் தாக்கியதில் இவரது மனைவி, குழந்தைகள், இரண்டு விதவை சகோதரிகள், அவர்களது குழந்தைகள்,இரண்டு விதவை மருமகள்கள் மற்றும் அவர்களது குழந்தைகள என 32 பேரைக் காணவில்லை.
அவர்களையும் அவர்களது உடல்களையும் ஒரு பக்கம் தேடியலைந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைஅளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார் குத்தூஸ்.
அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான குவிந்துள்ளதால் மருத்துவமனையில் வேலைப் பளு அதிகமாகி விட்டது. மேலும்நாங்கள் இருந்த பகுதிகளைத் தொடர்பு கொள்ள எந்த வசதியும் இல்லை.
எனது குடும்பத்தினரைத் தேடும்படி அரசு நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரி வருகிறேன். இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. அனைத்துமுகாம்களிலும் தேடிப் பார்த்தேன். அங்கு எனது குடும்பத்தினர் யாரும் இல்லை.
வேறு தீவுகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை சுமந்து கொண்டு மீட்பு விமானங்கள் வரும்போதெல்லாம் விரைந்து சென்று பார்ப்பேன்.இதுவரை எனது குடும்பத்தினரில் ஒருவர் கூட வரவில்லை.
நாங்கள் தங்கியிருந்தது கடலுக்கு அருகாமையில்தான். இந்தத் தீவில் உயர்ந்த மேட்டுப்பகுதிகள் எதுவும் இல்லாததால் பாதிப்பு அதிகமாகிவிட்டது என்றார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்













Click it and Unblock the Notifications