சுனாமி: ரூ. 2 கோடியில் வீடுகள் கட்டித் தரும் பாஜக
சென்னை:
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சுனாமி அலைகள் தாக்கிய பகுதிகளை நானும், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரும் பார்வையிட்டோம். பாதிக்கப்பட்டமக்களுக்கு 200 டன் பொருட்கள், 75 டன் அரிசி மற்றும் மருந்துகளை வழங்கினோம்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ரூ.5 கோடியும், ரூ.5 கோடி மதிப்பிலான துணிகளையும் வழங்கினார். பாஜக தலைவர் அத்வானிபாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பாஜக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இணைந்து இதுவரை 2,400 சடலங்களை மீட்டுள்ளனர்.
மீனவர்களுக்கு புதிய மீன்வலைகள் இந்தியாவில் கிடைப்பது சிரமமாக இருந்தால் அவற்றை வெளிநாட்டில் இருந்து தருவிக்க வேண்டும்.
கர்நாடக பாஜக அனுப்பி வைத்த 100 டன் தார்பாலின்களைக் கொண்டு 20,000 கூடாரங்களை அமைத்துக் கொடுக்க உள்ளோம். மேலும்ரூ.2 கோடி செலவில் 200 அடுக்கு மாடி வீடுகளை விரைவில் கட்டித் தரவுள்ளோம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சிறப்பாக நிவாரண உதவி அளித்து வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், தமிழகத்திற்கு அதிக நிதியை மத்திய அரசிடம் கேட்க வேண்டும் என்று திமுகபொருளாளர் ஆற்காடு வீராசாமி கூறினார். அனைத்துக் கட்சிகளும் இத்தகைய கருத்தையே கொண்டுள்ளன.
இந்த ஒற்றுமை உணர்வு கடைசி வரை தொடர வேண்டும் என்று அவர் கூறினார்.