சங்கர மடத்திற்குப் புது மேலாளர் நியமனம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் புதிய மேலாளராக பொள்ளாச்சி மகாதேவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி ஜெயேந்திரர், நிர்வாகத்தை கவனித்து வந்த ரகு, மடத்தின் மேலாளர் சுந்தரேசஅய்யர், கணக்காளர் விஸ்வநாத அய்யர் ஆகியோர் உள்ளே போய்விட்ட நிலையில் மடத்தின் நிர்வாகம்ஸ்தம்பித்துள்ளது.
நீலகண்ட அய்யர் என்ற வயதில் மூத்த நிர்வாகி கையெழுத்திட்ட செக்குகளை வங்கிகள் திருப்பி அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் மட விஷயங்களில் இருந்து ஒதுங்கிக் கொண்டுவிட்டார் நீலகண்ட அய்யர்.
வழக்கமான பூஜைகளை விஜயேந்திரர் தவறாமல் மேற்கொண்டு வருகிறார். ஆனால், மடத்தின் கீழ்மட்டஊழியர்களைக் கொண்டு நிதி நிர்வாகத்தை அவரால் கவனிக்க இயலவில்லை.
இதையடுத்து மடத்திற்குப் புதிய மேலாளராக பொள்ளாச்சி மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரதுநியமனத்துக்கு ஜெயேந்திரரின் ஒப்புதலும் பெறப்பட்டதாதத் தெரிகிறது.
நேற்றே அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மகாதேவன் இதுவரை பொள்ளாச்சியில் உள்ள சங்கர மடகிளையின் நிர்வாகத்தை கவனித்து வந்தார். மேலும் டெல்லியில் உள்ள சங்கர மட நிர்வாகத்தையும் அவரேகட்டுப்படுத்தி வந்தார்.
காஞ்சி மடத்திற்குப் புதிய மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளதால் மடத்தின் அன்றாடப் பணிகள் தொய்வின்றி நடக்கவழி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications