For Daily Alerts
Just In
தூத்துக்குடி: சாலை விபத்தில் 3 பேர் பலி
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
கொடைக்கானல் வங்கியொன்றில் பணியாற்றி வரும் சோபியா என்பவர் தனது குடும்பத்தாருடன் காரில் சொந்த ஊரானதூத்துக்குடிக்குச் சென்றார். இன்று காலை அவர்களது கார் தூத்துக்குடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசுப்பேருந்து கார் மீது மோதியது.
இதில் கார் ஓட்டுநர், சோபியாவின் கணவர், தாயார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சோபியா, அவரது 2 மகன்கள்படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Comments
Story first published: Sunday, January 9, 2005, 5:30 [IST]