For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகத்தில் ஆற்றில் பஸ் விழுந்து 57 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

பீஜப்பூர்:

கர்நாடகம் மாநிலம் பீஜப்பூரில் அரசு பஸ் ஆற்றில் விழுந்ததில 57 பேர் பலியாகிவிட்டனர்.

நிடுகுன்டி என்ற இடத்தில் இன்று அதிகாலை இவ் விபத்து நடந்தது.

குல்பர்கா மாவட்டம் சிதாபூரில் இருந்து ஹூப்ளிக்குச் சென்று கொண்டிருந்த அந்த கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகப்பேருந்து அலமாத்தி அணையின் மாபெரும் வாய்க்காலில் விழுந்தது.

குறுகலான வளைவில் திரும்பியபோது 15 அடி ஆழமுள்ள இந்தக் கால்வாய்க்குள் பஸ் பாய்ந்தது. கால்வாயில் நீர்நிரம்பியிருந்ததால் பஸ், நீருக்குள் முழுவதுமாக மூழ்கியது.

இதில் 66 பேர் பயணம் செய்தனர். அவர்கள் தூக்கத்தில் இருந்துபோது இந்த விபத்து நடந்தது. பலியான 57 பேரின் உடல்களும்மீட்கப்பட்டுவிட்டன. பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே சென்று மீட்புப் பணியினர் உடல்களை வெளியே எடுத்தனர்.

இறந்தவர்களில் 18 பெண்களும், 2 குழந்தைகளும் அடக்கம். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இந்த விபத்தில் பலியானார்கள்.இவர்கள் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ஜாவர்கி பகுதியைச் சேர்ந்தவர்கள். மேலும் 9 பேர் நீந்திக் கரை சேர்ந்துவிட்டனர்.

பஸ்ஸை வெளியே இழுக்கும் முயற்சியில் முதலில் 2 கிரேன்கள் ஈடுபட்டன. ஆனால், பஸ்ஸை வெளியில் எடுக்க முடியவில்லை.இதையடுத்து மேலும் 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டன. இப்போது கால்வாயில் இருந்து நீரை வெளியேற்றி பஸ்சை வெளியேஎடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

கால்வாய் அருகே பஸ்ஸைத் திருப்ப ஓட்டுநர் முயன்றபோது, வண்டி கட்டுபாட்டை இழந்து கால்வாயில் விழுந்ததாக போலீஸார்தெரிவித்தனர். இது குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியை வெளியிட்டுள்ள கர்நாடக முதல்வர் தரம்சிங், போக்குவரத்துத் துறை அமைச்சர்மல்லிகார்ஜூன கார்கேயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கார்கே அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X