For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுக்கோட்டை மீனவர்கள் 500 பேர் சாலை மறியல்

By Staff
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை:

Fishermen agitate for relief fund
நிவாரண நிதி வழங்கக் கோரி புதுக்கோட்டை மீனவர்கள் 500 பேர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி வருகிறது. இந்த நிதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனையடுத்து தங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரி கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 500 பேர் இன்று காலை கோட்டைப்பட்டினம் - அறந்தாங்கி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து, மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரண நிதி வழங்க ஆவண செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X