நாகப்பட்டினத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்:
![]() |
டிசம்பர் 26ம் தேதி தமிழகத்தை தாக்கிய சுனாமிக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது நாகை மாவட்டம். இங்கு மட்டும் ஆயிரக்கணக்கானோர்பலியாயினர். மீட்பு நடவடிக்கைகள் முடிந்து தற்போது நிவாரணப் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.
இந் நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இருப்பினும் சுனாமிபீதியிலிருந்து இன்னும் ஏராளமான மாணவ, மாணவியர் மீளாததால், பள்ளிகளில் மாணவர் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.
ஏராளமான மாணவ, மாணவியரின் புத்தகங்கள், சீருடைகள் சுனாமியால் அழிந்து விட்டதால் அவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாகபாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவ, மாணவியர் வருகை போகப் போகத்தான் வழக்கமான நலைக்கு வரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications