For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுனாமி: அரசுக்கு எம்.எல்.ஏ. எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

The scene in Nagai
சுனாமி பாதித்த நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டசபைத் தொகுதி மீனவர்களுக்கு உரிய நிவாரணம் உடனடியாகவழங்கப்படாவிட்டால் கோட்டை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அத்தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ.அப்பாவு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் சுனாமியால்கடுமையாக பாதிக்ப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசின் நிவாரண உதவி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

மாவட்ட நிர்வாகம் எனது தொகுதி மீனவர்களைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. எனது தொகுதியில் மட்டும் ரூ. 75கோடி அளவுக்கு மீனவர் கிராமங்கள் சேதமடைந்துள்ளன.

இவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்காவிட்டால் சென்னை தலைமைச் செயலகம் (கோட்டை) முன்பு உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X