நாகையில் தொடரும் சுனாமி புரளி
நாகப்பட்டினம்:
சுனாமி அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந் நிலையில் சுனாமி அலைகள் மீண்டும் தாக்கப் போகிறது என்று சிலர் அடிக்கடி கிளப்பும் புரளிகளால் மக்கள்பெரிதும் அச்சமடைகின்றனர்.
தங்களது உடைமைகளை அப்படியே போட்டு விட்டு வீட்டை விட்டு அலறியடித்தவாறு வெளியேறுகின்றனர். பீதியடையவேண்டாம் என்று போலீஸார் கூறும் சமாதானங்கள் மக்களிடம் எடுபடவில்லை. இது குறித்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தமுத்துவேல் என்ற மீனவர் நிருபர்களிடம் கூறுகையில்,
சுனாமி அலையில் எங்களது உற்றார், உறவினர்கள் கண்ணெதிரிலேயே அடித்துச் செல்லப்பட்டனர். அதனால் நாங்கள் ரிஸ்க்எடுக்க விரும்பவில்லை. பயப்பட வேண்டாம் என்று இங்கு இருக்கும் போலீஸார் எங்களிடம் கூறினாலும், மக்களிடம் சுனாமிகுறித்து அச்சம் போகவில்லை என்றார்.
இத்தகைய வதந்திகளால் திருவாரூர் மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு வரும் பேருந்துகளும் பாதி வழியில் திரும்பிச்சென்றுவிடுகின்றன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
வதந்திகள் மீண்டும் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு காவல்துறைக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தின்புதிய ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்த வேலையில் போலீஸாருடன் இணைந்து செயலாற்ற கடலோர கிராமத்து இளைஞர்களைத் தேர்வு செய்து ஒரு குழுஅமைக்கவிருக்கிறோம்.
மீன்களில் தொற்றுநோய்க் கிருமிகள் பரவியிருப்பதாக கிளம்பிய வதந்திகள் குறித்தும் மக்களிடம் விளக்கி வருகிறோம். பல்வேறுபரிசோதனைகளின் முடிவில் எந்த தொற்றுநோய்க் கிருமியும் மீன்களில் இல்லை என்பது நிருபணமாகியுள்ளது. இதை மக்களிடம்எடுத்துக் கூறிவருகிறோம் என்றார்.