தமிழகத்தில் குழந்தைத்தனமான ஆட்சி: விஎச்பி.
சென்னை, ஹைதராபாத் & மும்பை:
தமிழகத்தில் குழந்தைத்தனமான ஆட்சி நடைபெறுகிறது என்று வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்தார்.
ஜாமீனில் வெளிவரும் ஜெயேந்திரரை வரவேற்க அசோக் சிங்கால் இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம்அவர் கூறியதாவது:-
விஜயேந்திரர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கதக்கது. தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு சீர் கெட்டு விட்டது இங்கு குழந்தைதனமானஆட்சி நடக்கிறது.
இதற்கு முதல்வர் ஜெயலலிதா மட்டும் காரணம் இல்லை. கூட்டு சதி நடந்து இருக்கிறது.
விஜயேந்திரர் கைதைக் கண்டித்து விஸ்வ இந்து பரிஷத் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும். இதில் இந்துக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்துக்களின் பொறுமைக்கு சோதனை
இந் நிலையில், விஜயேந்திரர் கைது இந்துக்களின் பொறுமைக்கு ஒரு சோதனை என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் தடுத்துநிறுத்தப்படாவிட்டால் பொறுமை எல்லை மீறி வெடித்து விடும் என்றும் ஆந்திர மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மத்தியஅரசுக்கும், தமிழக அரசுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஆந்திர மாநில வி.எச்.பி. செயலாளர் முரளிதர் ராவ் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:
இந்து மதத்தின் மீது தமிழக அரசு நடத்தி வரும் தாக்குதல்களை மத்திய அரசு மெளனமாகப் பார்த்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சங்கர மடத்தின் புனிதத்தை தமிழக போலீஸார் பூட்ஸ் கால்களுடன் உள்ளே நுழைந்து களங்கப்படுத்தி விட்டனர்.
தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனம் இருப்பதுபோன்ற ஒரு அச்ச உணர்வு மக்களிடம் இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக இந்தவிவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கூறினார்.
மும்பையில் சாலை மறியல்:
இதற்கிடையே விஜயேந்திரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மும்பையில் விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் சாலை மறியலில்ஈடுபட்டனர்.
மும்பை வி.எச்.பி. தலைவர் தலைவர் அருண் ஹண்டா ஆகியோர் தலைமையில் 200 தொண்டர்கள் தெற்கு மும்பையில் உள்ள பாபுல்நாத்கோயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர். விஜயேந்திரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த மறியல் அரை மணிநேரம் நீடித்தது.












Click it and Unblock the Notifications