மதுரை பொங்கல் விழா ரத்து

Subscribe to Oneindia Tamil

மதுரை:

சுனாமி சோகம் காரணமாக மதுரையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பொங்கல் விழா இந்த ஆண்டு ரத்துசெய்யப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும்வெளிநாட்டவர்களுக்காக 2 நாள் விழா மதுரையில் நடைபெறும்.

இந்த விழாவின்போது கிராமப் பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர்,பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களில் அவர்களும் பங்கேற்பர், அலங்காநல்லூரில் நடைபெறும் பிரபலமானஜல்லிக் கட்டு நிகழ்ச்சியையும் அவர்கள் நேரில் காண ஏற்பாடு செய்யப்படும்.

இந் நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரி பாஸ்கரன்தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டினருக்காகபொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட சோகம் காரணமாக பொங்கல் விழாவை ரத்து செய்துள்ளோம். வழக்கமானநிகழ்ச்சிகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன,

அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும். அங்கு சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்படும்காலரிகளில், வெளிநாட்டுப் பயணிகள் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யுமாறு அலங்காநல்லூர்பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளோம்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு எந்தவித ஏமாற்றம் ஏற்படாது என்றார்.

பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை சரி செய்யும்விதமாக பிப்ரவரி மாதம் மதுரையில் 15 நாள் கலை விழாவுக்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த விழா நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+