அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
டெல்லி:
போலீஸ் காவலில் சங்கராச்சாரியாரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான வீடியோ தொலைக்காட்சிகளுக்கு போனது எப்படிஎன்பது குறித்து 2 வாரத்தில் விளக்கம் தரக் கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே போல இளையவரான விஜயேந்திர் கைது செய்யப்பட்ட விதம் (ஷூ கால்களுடன் 50க்கும் மேற்பட்ட போலீசார் மடத்துக்குள்நுழைந்து, அதிரடியாக அவரைக் கைது செய்தது) குறித்தும் விளக்கம் தருமாறு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் தரப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் அவசர அவசரமாக இளையவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூஜைசெய்து கொண்டிருந்தபோது, அனுமதி கூட இல்லாமல் மடத்துக்குள் போலீசார் நுழைந்து இளையவரை கைது செய்தது ஏன்? என்றுஆணையம கேள்வி எழுப்பியுள்ளது.
இரு மடாதிபதிகளும் கைதானால் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் பூஜைகள் தடைபடும், பக்தர்களின் மனம் புண்படும் என்றுபத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன.
மேலும் சங்கராச்சாரியார் போலீஸ் காவலில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதி சில தொலைக்காட்சிகளுக்கு கசியவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வழக்கை சந்திக்கும் ஒருவரது அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கருத இடம் உள்ளது.
இதற்கான விளக்கத்தை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் இருவாரங்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications