For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமி நிவாரண பணிகளில் தலித்துகள் புறக்கணிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

The scene in Nagapattinam

சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் தலித் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்படுவதாகவும், ஜாதிப் பாகுபாடுபார்க்கப்படுவதாகவும் தேசிய தலித் மனித உரிமை இயக்க பொதுச் செயலாளர் வின்சென்ட் மனோகரன் தெரிவித்துள்ளார்.

வின்சென்ட் மனோகரன் உள்ளிட்ட தேசிய தலித் மனித உரிமை இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் குழுவினர் கடலூர், நாகப்பட்டனம்,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று சுனாமி நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு குறித்து வின்சென்ட் மனோகரன் தெரிவிக்கையில், சுனாமி பாதிப்பிலிருந்து எப்படி மீளுவது என்று அனைவரும் யோசித்துக்கொண்டுள்ளோம். ஆனால் இந்த கொடுமையான சூழ்நிலையிலும் கூட, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜாதி பாரபட்சம் பார்க்கப்பட்டுவருவதை அறிந்து வேதனை அடைந்தோம்.

தஞ்சை, நாகை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தலித்துகள்புறக்கணிக்கப்படுகிறார்கள். மற்ற ஜாதியினர் சேர்ந்து கொண்டு தலித்துகளுக்கு சேர வேண்டிய நிவாரணங்களை தர விடாமல்தடுக்கின்றனர்.

மீனவர்கள் மட்டுமே சுனாமியால் பாதிக்கப்பட்டது போல செய்திகள் பரவியுள்ளன. உண்மையில் இந்த பகுதிகளைச் சேர்ந்த 86 தலித்கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இதுவரை நிவாரணங்கள் சென்று சேரவில்லை என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X