காமாட்சி அம்மன் கோவிலில் போலீஸ் சோதனை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தனிப்படை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
சங்கர மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் காமாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்று முன் தினம் பிற்பகலில் காஞ்சிபுரம் தனிப்படைபோலீஸார் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சென்றனர்.
கோவில் நடை சாத்திய பின்னர் அதன் நிர்வாகியான கே.எஸ்.செல்லப்பாவிடம் விசாரணை நடத்தினர்.
சுமார் 3 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. அதே நேரத்தில் கோவில் அலுவலகத்தில் போலீஸ் சோதனையும் நடத்தப்பட்டது.
கடந்த ஒரு வாரமாகவே காமாட்சி அம்மன் கோவிலுக்கு போலீஸார் வந்து விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருவதாகசெல்லப்பா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இச் சோதனையின்போது காமாட்சி அம்மனின் நகைகள், அவற்றின் எடை, அளவு குறித்தும், அம்மனுக்கு சார்த்தப்பட்ட கவசங்கள்குறித்தும் போலீஸார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.