For Daily Alerts
Just In
அரசின் கட்டுப்பாட்டில் வரப் போகும் காஞ்சி மடம்?
சென்னை:
காஞ்சி மடத்தை தன் கட்டுப்பாட்டில் எடுக்க தமிழக அரசு விரைவில் அரசாணைப் பிறப்பிக்கும் என்று தெரிகிறது.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது செய்யப்பட்டும், மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டும் பீடாதிபதியில்லாத நிலைக்கு காஞ்சி மடத்தைத்தள்ளியுள்ளது அரசு. அதே போல மடம் மற்றும் அதைச் சார்ந்த அறக்கட்டளைகளிந் 183 வங்கிக் கணக்குகளையும் முடக்கிவிட்டது.
மடத்தையே தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் நோக்கத்துடன் தான் வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியதாகக் கூறப்படுகிறது.
மடத்தை அரசே தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்துமடத்தின் வழக்கறிஞரிடம் கேட்டபோது,
அப்படி ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே அது குறித்து ஏதும் கருத்துத் தெரிவிக்க முடியும். இப்போதைக்கு ஏதும் சொல்லமுடியாது என்றார்.
Comments
chennai tamil nadu news summon kanchi sankarachariyar vijayendrar tn seshan kanchi mutt ravi subramaniam
Story first published: Saturday, January 15, 2005, 5:30 [IST]