For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனா: ஜனநாயக ஆதரவு கம்யூனிஸ்ட் தலைவர் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

பெய்ஜிங்:

சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், தியானென்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மீது டாங்கிகளை ஏற்றிக் கொன்றஅரசின் செயலைக் கண்டித்ததால் 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டவருமான ஷோ சியாங் இன்று மரணமடைந்தார்.

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் வாய்ந்த பதவியில் இருந்த ஷியாங், 1989ல் ஜனநாயகத்துக்காக மாணவர்கள் நடத்தியபோராட்டத்தை ராணுவத்தைக் கொண்டு ரத்தக்களறியுடன் அடக்க டெங் சியோ பிங் உத்தரவிட்டபோது அதை எதிர்த்தார்.

இதனால் அவரைக் கைது செய்தது சீன அரசு. வீட்டுக்காவலிலேயே முடக்கி வைக்கப்பட்ட அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 85.

இவரது மறைவைத் தொடர்ந்து மாணவர்கள் மீண்டும் ஜனநாயகம் கோரி போராட்டத்தில் குதிக்கலாம் என்ற பரபரப்பு சீனாவைத் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் தியானென்மென் சதுக்கத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பாதுகாப்பும், உளவுப் பிரிவினரின் கண்காணிப்பும்அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

தியானென்மெனில் நடந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான மாணவர்களை சீன ராணுவம் கொன்று குவித்தது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X