ரகுவும் குண்டர் சட்டத்தில் கைதாகிறார்
காஞ்சிபுரம்:
விஜயேந்திரரின் தம்பி ரகுவையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காஞ்சி தனிப்படை போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கூலிப் படையினரான கதிரவன், சின்னா உள்ளிட்ட 6 பேர்குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் விரைவில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படவுள்ளனர்.
ஜாமீனில் கூட ஓராண்டுக்கு வெளியில் வர முடியாத சிறை தண்டனை இது.
இந் நிலையில் வியேந்திரரின் தம்பி ரகுவையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸார் முடிவுசெய்துள்ளனர். இதுதொடர்பான நடவடிக்கை (ஆட்சித் தலைவரிடம் அனுமதி கோருவது உள்ளிட்ட) தொடங்கிவிட்டதாக தனிப்படை போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேசனுக்கு இதுதொடர்பான கோப்புகள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டதாகத்தெரிகிறது.
சங்கரராமனைக் கொன்ற கூலிப் படையை ஏற்பாடு செய்ததாக ரகு மீது போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். டிசம்பர்30ம் தேதி ரகு கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே விஜயேந்திரரோடு ரகுவையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார்காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.