ஜெ ஆட்சியை கலைக்க சொல்ல மாட்டோம்: கருணாநிதி
சென்னை:
அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கையே வைக்க மாட்டோம் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:
சுனாமி நிவாரணப் பணிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டினால் திமுக மீது பாய்கிறார் முதல்வர் ஜெயலலிதா. நிவாரணப்பணிகளில் திமுக முடிந்த அளவு உதவி வருகிறது. கண்ணீர் துடைக்க கட்சிச் சாயம் தேவையில்லை.
தமிழகத்தில் நிவாரணப் பணிகளில் தனியார், சமூக அமைப்புகள் ஈடுபட்ட அளவுக்கு தமிழக அரசு ஈடுபடவிலலை என்பதை நல்லோர்நடத்திடும் ஏடுகள் எடுத்துச் சொல்கின்றன. இந்தக் குறையை சரி செய்வதை விட்டுவிட்டு எம்ஜிஆர் பிறந்த நாள் என்ற பெயரில் திமுக மீதுசீறி விழுந்திருக்கிறார் ஜெயலலிதா.
விரைவான நிவாரணப் பணிகள் மேற்கொண்ட தன்னைப் பார்த்து திமுக பொறாமைப்படுவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். சிரிப்புத்தான்வருகிறது.
எங்கள் மீது ஜெயலலிதா ஏன் பாய வேண்டும்?. பா.ஜ.க. மாதிரி அவரது ஆட்சியை கலைக்கச் சொன்னோமா?. அல்லது ஆட்சியைக்கலைக்கத் தான் கோரப் போகிறோமா?.
திமுக மீது பாய்ச்சல் காட்டுவதை விட்டு விட்டு உண்மையிலேயே நிவாரணப் பணிகளில் ஜெயலலிதா கவனம் செலுத்தலாம் என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications