மோசடி திருமணம்: இங்கிலாந்தில் 25 இந்தியர்கள் கைது
லண்டன்:
பிரிட்டிஷ் குடியுரிமை உள்ளவர்களுடன் பொய்த் திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்துக்குள் சட்ட விரோதமாகக் குடியேறிய 25இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் குடியுரிமை உள்ளவர்களுடன் மோசடித் திருமணங்களை செய்து கொண்டு அந் நாட்டில் பலர் குடியேறி வருகின்றனர்.
இதற்காக பல ஏஜெண்டுகள் செயல்படுகின்றனர். பணத்துக்காக இத் திருமணங்களுக்கு ஒப்புக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்உள்ளனர். இந்த ஏஜெண்டுகள் உதவியுடன் பொய்யான திருமணங்களை செய்து கொண்டு, அதைப் பதிவு செய்துவிட்டு, பின்னர்இங்கிலாந்தில் குடியேறியவுடன் இந்தத் தம்பதி பிரிந்து விடும் அல்லது விவாகரத்து செய்து கொள்ளும்.
இந்த மோசடியைத் தடுக்க அவ்வப்போது பிரிட்டிஷ் குடியுரிமைப் பிரிவினர் நடவடிக்கை எடுத்தவண்ணம் உள்ளனர். பலர் மீதுவழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இந் நிலையில் மோசடித் திருமணங்களை முன் நின்று நடத்திய ஏஜெண்டுகளான இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரைச் சேர்ந்த சலீம் முல்லான்(வயது 50), லண்டன் ஈஸ்ட் ஹாமைச் சேர்ந்த இப்ராகிம் உமர்ஜி (66) ஆகியோருக்கு 4 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோசடித் திருமணம் செய்து கொண்டு இந்திய ஆண்கள் இங்கிலாந்தில் குடியேற உதவி 14 பெண்கள் உள்பட மேலும் 23 பேருக்கு 3ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முல்லானின் மனைவி ஜாகராவுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் கணவருக்குத் துணையாகஇருந்ததோடு, இந்த விவகாரத்தில் வரவு செலவுகளைக் கையாண்டுள்ளார். இவரது கணக்கில் இரு வங்கிகளில் 80,000 பவுண்ட் பணம்இருப்பது தெரிய வந்துள்ளது.
மோசடித் திருமணம் செய்து கொண்டு இந்திய ஆண்கள் இங்கிலாந்துக்குள் நுழைய உதவுவதற்காக ஒரு இந்தியப் பெண் கடந்த 5ஆண்டுகளில் 6 முறை திருமணம் செய்துள்ளதும் நீதிமன்ற விசாரணையில் உறுதியானது.
சிறையில் அடைக்கப்பட்ட 25 பேரில் 14 பேர் பெண்களாவர். இவர்களில் பலர் கணவர் இல்லாத நிலையிலும் குழந்தைகள் பெற்றவர்கள்.
மொத்தத்தில் முல்லா மற்றும் உமர்ஜி கும்பால் 36 சட்ட விரோத திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவைஇங்கிலாந்திலும் சில இந்தியாவிலும் நடந்துள்ளன.
-
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications