மதுரை: கோவிலை பூட்டி நிர்வாகிகள் போராட்டம்
மதுரை:
மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோவிலை இந்து அறநிலையத்துறைதனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதை எதிர்த்து கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் கோவிலைப் பூட்டிபோராட்டம் நடத்தினர்.
300 ஆண்டு பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலை விஸ்வகர்மா சமூகத்தினர்நிர்வகித்து வருகின்றனர்.
இக் கோவிலில் நிதி முறைகேடுகள் நடந்ததாக சில ஆண்டுகளுக்கு முன் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்துகோவிலை இந்து அறநிலையத்துறை ஏற்று நடத்த முடிவு செய்தது.
இது தொடர்பாக மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் நிர்வாகிகளுக்கு இந்து அறநிலையத்துறை அனுப்பியகடிதத்தில், காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து கோவில் காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகிகள் சார்பில் மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டது. இதில் நிர்வாகிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்பட்டது. இதில் அறநிலையத்துறைக்கு சாதகமாக சமீபத்தில் தீர்ப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து கோவிலை கையகப்படுத்துமாறு கூடலழகர் பெருமாள் கோவில் நிர்வாகிகளுக்குஅறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுப்படி கூடலழகர் கோவில் நிர்வாகிகள் காமாட்சிஅம்மன் கோவிலுக்கு சென்றனர்.
ஆனால் அவர்களை எதிர்த்து, கோவிலைப் பூட்டிய விஸ்வகர்மா சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் கோவிலைஒப்படைக்க மாட்டோம் என்று கூறி சாலையில் கூடி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்புஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து அகன்றுச் சென்றுவிட்ட கூடலழகர் கோவில் நிர்வாகிகள் இது தொடர்பாகபோலீஸில் புகார் செய்துள்ளனர்.