மயூரணி கொலை: தேவரிடம் விசாரணை
மதுரை:
இலங்கையைச் சேர்ந்த மாணவி மயூரணி கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணைதொடங்கியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மயூரணி என்ற மாணவி மதுரை அம்பிகா கல்லூரியில் படித்து வந்தார். அந்தக் கல்லூரியின்உரிமையாளரான சோலமலைத் தேவரின் வீட்டின் மாடியில் தங்கியிருந்தார்,
இந் நிலையில் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மயூரணி அவர் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில்ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
மயூரணியை கற்பழிக்க முயன்ற தேவர் அது முடியாமல் போகவே ஆள் வைத்து அவரைக் கொலை செய்ததாகக்கூறப்பட்டது.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி சோலமலைத் தேவர், அவரது மனைவி உள்ளிட்டோரை கைதுசெய்தனர். ஆனால், தேவரை வழக்கில் இருந்து காப்பாற்ற காக்கிச் சட்டைகள் முயன்று வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இந் நிலையில் இந்த வழக்கில் நேற்று முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. இதில் சோலமலைத் தேவர்உள்பட 17 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேற்று மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணையின்போது, சோலமலைத் தேவரும்அவரது மனைவியும் விசாரிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications