சங்கரராமன் வழக்கு: மேலும் 12 பேருக்கு குண்டாஸ்?
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 பேரை குண்டர்சட்டத்தில் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை ஜெயேந்திரர், விஜயேந்திரரையும் சேர்த்து 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்கதிரவன், சின்னா என்ற ரஜினி, மாட்டு பாஸ்கர், அம்பி என்ற அம்பிகாபதி, மீனாட்சி சுந்தரம், அனில்குமார், அனந்தகுமார் ஆகியோர்குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் 12 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இவர்களில் விஜயேந்திரரின் தம்பிரகுவும் அடக்கம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications