For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் "திருச்சி" சுவாமிகள் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

திருச்சி ஸ்வாமிகள் என அழைக்கப்பட்ட பெங்களூர் கைலாசா ஆசிரம தலைவரான பரமாச்சார்யா ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீதிருச்சி சுவாமிகள் மரணமடைந்தார்.

திருச்சியில் கடந்த 1929ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் பழனிச்சாமி. 1960ம்ஆண்டு பெங்களூர் வந்த இவர் அங்கு திருச்சி சுவாமி என்று அழைக்கப்பட்டார்.

பெங்களூரில் உள்ள மிகப் பிரபலமான ராஜராஜேஸ்வரி ஆலயம் இவரது முயற்சியால்தான் கட்டப்பட்டது.பெங்களூர் நகர வளர்ச்சிக்காகவும், ஆன்மீக வளர்ச்சிக்காகவும் ஏராளமான பணிகள் செய்துள்ளார்.

கர்நாடகத்தின் பிரபல ஆதிசுன்சினகிரி மடாதிபதி பாலகங்காதர சுவாமிகளின் குருவாகவும் திருச்சி சுவாமிகள்விளங்கினார்.

நீண்ட நாட்களாக உடல் நிலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மரணமடைந்தார். அவரது உடலுக்குகர்நாடக முதல்வர் தரம்சிங் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X