இந்தியா திரிசூல் ஏவுகணை சோதனை
Subscribe to Oneindia Tamil
பலசூர்:
விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணையான திரிசூல் இன்று சோதனையிடப்பட்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை இன்று பகல் 12.53 மணிக்கு ஒரிஸ்ஸா மாநிலம் சண்டிப்பூர் ஏவுகணைத் தளத்தில்இருந்து ஏவப்பட்டது. 9 கிமீ உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானியில்லாமல் இயங்கும் விமானத்தை இந்த ஏவுகணை சரியாகத் தாக்கிவீழ்த்தியது.
3 மீட்டர் நீளம், 200 செ.மீ. விட்டம் கொண்ட இந்த ஏவுகணை 5.5 கிலோ வெடிபொருளைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. திடஎரிபொருளால் இயங்கும் இந்த ஏவுகணையின் தாக்குதல் தூரம் மேலும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானங்கள் தவிர கடலிலும் தரையிலும் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையிலும் திரிசூல் ஏவுகணை வடிமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications