வீரப்பன் சிலை மாயம்!
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரப்பனின் சமாதி உள்ளஇடத்தில் வைக்கப்பட்டிருந்த வீரப்பனின் 4 அடி உயர சிலை திடீரென்றுமாயமாகிவிட்டது.
மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு மலை கிராமத்தில் வீரப்பனின் உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை வீரப்பனின் 4அடி உயர சிலை திடீரென உதயமானது. கையில் துப்பாக்கியுடன் நின்ற இந்தச் சிலையை யார் வைத்தது என்பது தெரியவில்லை.
சிலை வைக்கப்பட்ட இடம் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமானது என்பதால் சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து சிலையை அகற்றநடவடிக்கை எடுக்குமாறு கொளத்தூர் காவல் நிலையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
இந் நிலையில் நேற்றிரவில் வீரப்பன் சிலை வந்த திடீரென காணாமல் போனது. உயிரோடு இருக்கும் வரை மாயாவியாக இருந்த வீரப்பன்செத்தும் மாயாவியாகவே இருக்கிறான்.
ஏலத்திற்கு வரும் துப்பாக்கிகள்:
இதற்கிடையே வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் ஆகியோரைத் தேடி அதிரடிப்படையினர், போலீஸார் ஆகியோர் அந்தியூர், பர்கூர் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில்வேட்டை நடத்தியபோது ஏராளமான கூட்டாளிகள் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, வீரப்பன் மற்றும் அவனது கும்பலை அதிரடிப்படையினர் சுட்டு வீழ்த்தியபோது ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட துப்பாக்கிள்கைப்பற்றப்பட்டன.
மொத்தம் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் வீரப்பன் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஏ.கே.47 மற்றும் சிலதுப்பாக்கிகளை போலீஸார் தங்களிடம் வைத்துக் கொண்டு மற்றவற்றை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 200 துப்பாக்கிகள் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன்ஆய்வு செய்தார்.
இதன் முடிவில் 11 துப்பாக்கிகளை மட்டும் ஏலம் விடவும் மற்றவற்றை துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலைக்கு அனுப்பி அழித்து விடவும் முடிவுசெய்யப்பட்டது.
ஏலம் விடப்படவுள்ள துப்பாக்கிகளுக்கு ரூ. 700 முதல் ரூ. 8,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே துப்பாக்கி வைத்திருப்பதற்கானஉரிமம் பெற்றவர்களுக்கு இந்த துப்பாக்கிகள் ஏலம் மூலம் வழங்கப்படும் என்று கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications