விஎச்பி தலைவருக்கு சம்மன் அனுப்ப தடை
சென்னை:
விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச தலைவர் வேதாந்தத்திற்கு 20ம் தேதி வரை சம்மன் அனுப்பக் கூடாது என்று காஞ்சிபுரம் தனிப்படைபோலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஷ்ணு காஞ்சி காவல் நிலைய அதிகார வரம்புக்குள்ள வராத பகுதியில் வசிக்கும் தனக்கு காஞ்சி தனிப்படை போலீஸார் சம்மன் அனுப்பஅதிகாரம் இல்லை. ஜனவரி 12 மற்றும் 13ம் தேதி தனக்கு அனுப்பப்பட்ட இந்த சம்மன்கள் சட்டவிரோதமானவை, அவற்றை ரத்து செய்யவேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வேதாந்தம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவை நீதிபதி சொக்கலிங்கம் விசாத்தார். அப்போது, வேதாந்தத்தின் வழக்கறிஞர் நடராஜன் வாதிடுகையில், இந்த சம்மன்கள்இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 160வது பிரிவை பூர்த்தி செய்வில்லை. எனவே அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து வரும் 20ம் தேதி வரை வேதாந்தத்திற்கு சம்மன் அனுப்பக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதி சொக்கலிங்கம்விசாரணையை 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications