சுனாமி: தமிழகத்தில் 350 பேர் மாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை & காஞ்சிபுரம்:

The scene in Nagai
சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட நாகப்பட்டிணம்-நாகூர் ரயில் பாதை மீண்டும் சீர் செய்யப்பட்டு அதில் நேற்று ஓடிய முதல் ரயில் (கம்பன் எக்ஸ்பிரஸ்)

தமிழகத்தில் சுனாமி தாக்குதலையடுத்து காணாமல் போன 350 பேரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை.

மாநிலத்தில் சுனாமிக்கு 12,000 பேர் வரை பலியான நிலையில், ஆயிரக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டு புதைக்கப்பட்டன.நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் சுனாமி தாக்கி ஒரு வாரம் வரை கரையொதுங்கின. அதன் பின்னர் உடல்கள்கரையொதுங்குவது நின்றுவிட்டது.

இந் நிலையில் சுனாமி பாதித்த 13 மாவட்டங்களின் காவல் நிலையங்களிலும் 350 பேரைக் காணவில்லை என்று புகார்கள்கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் இறந்துவிட்டார்களா அல்லது உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இதில் குமரி மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 117 பேரைக் காணவில்லை என்று புகார் தரப்பட்டுள்ளது. இதற்குஅடுத்தபடியாக சென்னையில் 63 பேரைக் காணவில்லை. இவர்களில் பலர் மீனவர்கள், மற்றவர்கள் காலையில் கடற்கரையில்ஜாகிங் சென்றவர்கள்.

கடலூரில் 51 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 22 பேரும், தஞ்சை மாவட்டத்தில் 37 பேரையும் காணவில்லை.

மேலும் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்ற கோவையைச் சேர்ந்த 28 பேரையும் காணவில்லை என்று புகார்கொடுக்கப்பட்டுள்ளது.

26 நாட்களாக இவர்கள் குறித்து எந்த விவரமும் இல்லாததால், இவர்கள் இறந்துபோய் ஒட்டுமொத்தமாய் புதைக்கப்பட்டஉடல்களில் இவர்களது உடல்களும் இருந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

மொத்தத்தில் 350 பேர் காணாமல் போய்விட்டதாக புகார்கள் வந்துள்ளன.

காணாமல் போனவர்கள் விஷயத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண நிதி போய்ச் சேருவதிலும் பெரும் சிக்கல்ஏற்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் 7 வருடமாக திரும்பி வராவிட்டால் தான் அவர் இறந்ததாகக் கருதப்படுவார். இந்த விதிகாரணமாக காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு சுனாமி நிவாரண நிதி கிடைப்பதில் பிரச்சனை உருவாகியுள்ளது.

இந்த நிதி கிடைக்க இறப்பை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். சுனாமி விஷயத்தில் இந்த விதியைத் தளர்த்த வேண்டும் என்றுகோரிக்கை விடப்பட்டுள்ளது.

அரசுக்கு இந்தக் கோரிக்கையின் வலி புரியுமா?

The scene in Kodiyakarai
கோடியக்கரை பகுதியில் கடலுக்கு வெளியே தூக்கி வீசப்பட்ட படகுகளை மீண்டும் கடலுக்குள் விடும் பணியில் மீனவர்களுடன் அமைச்சர் கே.பி.அன்பழகன்

நாகையில் அம்மை பரவல்:

இதற்கிடையே நாகப்பட்டிணத்தில் சுனாமி பாதித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளகுழந்தைகள் சிலருக்கு அம்மை நோய் பரவத் தொடங்கியுள்ளது.

மீண்டும் கடலுக்கு...

இதற்கிடையே சுனாமி தாக்குதலையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

கடந்த மாதம் 26ம் சுனாமி தாக்குதலையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.இந் நிலையில் கல்பாக்கம் அருகேயுள்ள உய்யாழிக்குப்பம் உள்ளிட்ட மீனவக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 5 படகுகளில்மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்களை ஊக்குவிக்க கைத்தறித் துறை அமைச்சர் சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன், உயர்அதிகாரிகள் ஆகியோரும் உடன் சென்றனர்.

அவர்கள் பிடித்து வந்த மீன்களை, அரசின் பிரதிநிதியாக வந்த மைத்ரேயன் ரூ.1,100 கொடுத்து வாங்கிக் கொண்டார்.

பின்னர் சுனாமி தாக்குதலில் காயமடைந்த நெமிலிக்குப்பத்தைச் சேர்ந்த 7 மீனவர்களுக்கு அமைச்சர் சோமசுந்தரம் தலா ரூ.5,000வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+