தமிழகத்தில் ஆந்திர நக்சல்கள் ஊடுறுவல்: தீவிர கண்காணிப்பு!
தர்மபுரி:
ஆந்திர மாநில நக்சலைட்டுகள் தமிழகத்திற்குள் ஊடுறுவ உள்ளதாக வந்த தகவலையடுத்து ஆந்திர-தமிழக எல்லைப் பகுதிமாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரியில் போலீஸார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநில மக்கள் போர்க் குழு நக்சலைட் அமைப்பினருக்கும், அம் மாநில அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்துள்ளது.இதையடுத்து அம் மாநில போலீஸார் நக்சலைட்டுகளை வேட்டையாடத் தொடங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இதையடுத்து ஆந்திர மாநிலத்தை ஒட்டி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிகள் வழியாக மலைகிராமங்களுக்குள் நக்சல்கள் ஊடுருவலாம் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து இப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அஞ்செட்டி, மொரப்பூர், கிருஷ்ணகிரி மலை, தீர்த்தகிரி, ஒடசல்பட்டி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டபோலீஸார் இணைந்து தேடுதல் வேட்டை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு 27 நக்சலைட்டுகளை போலீஸார் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications