சந்தனக் கடத்தல் வழக்கு: கோர்ட்டில் அப்பு
சென்னை:
ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சந்தனக் கட்டைகளை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கூலிப் படைத் தலைவன் அப்பு சென்னைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள அப்பு மீது கடந்த 1992ம் ஆண்டு ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சந்தனக் கட்டைகளைசிங்கப்பூருக்கு கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் இந்தவழக்கு நிலுவையில் உள்ளது.
தற்போது இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கில் சிக்குவதற்கு முன்பு வரை நீதிமன்றத்தில்அப்பு தவறாமல் ஆஜராகி வந்தார். கொலை வழக்கில் சிக்கி கைதாகியதால் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி பெருமாள் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து பிப்ரவரி 3ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதிஉத்தரவிட்டார்.
நேற்று செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவும், கூலிப் படைத் தலைவன் அப்புவும் அடுத்தடுத்து ஆஜர்படுத்தப்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications