பிப். 3ல் வழஙகப்படும் குற்ற பத்திரிக்கை நகல்?
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 25 பேருக்கும் வரும் பிப்ரவ 3ம் தேதியன்று குற்றப் பத்திரிக்கை நகல்வழங்கப்படும் என்று தெரிகிறது.
ரவி சுப்ரமணியம் அப்ரூவராக மாறிவிட்டதால், மற்ற 24 பேர் மீதும் கடந்த 21ம் தேதி காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில்1,873 பக்க குற்றப் பத்திக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து குற்றப் பத்திரிக்கையை நகல் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி இன்று முடிவடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர்களின் சிறைக் காவல் பிப்ரவரி 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே அன்றைய தினம் காவல் நீட்டிப்புக்காக அனைவரும் ஒரே நாளில் நீதிமன்றம் கொண்டு வரப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அன்றைய தினம் குற்றப் பத்திரிக்கையின் நகல் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.