காஞ்சி மடம் கோவிலே: கலவை மடம் விளக்கம்
கலவை
காஞ்சிபுரம் சங்கர மடம் ஒரு கோவில்தான் என கலவை சங்கர மடம் (ஜெயேந்திரர் தரப்பு) விளக்கம் அளித்துள்ளது.
காஞ்சி சங்கர மடம் கோவில் அல்ல, 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குட்டி காலனி அது, அங்கு படுக்கை அறை, கழிப்பறைகள்எல்லாம் உள்ளன என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெவித்திருந்தது. இதற்கு கலவை சங்கர மடம் ஆட்சேபனை தெவித்துள்ளது.
இதுதொடர்பாக கலவை மடத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
காஞ்சி மடத்தில் ஆதிசங்கரரின் சிலை இருக்கிறது. ஆறு சித்த சிஷ்யர்களின் சிலைகள் உள்ளன. இங்கு தொடர்ச்சியாக பூஜை நடத்தப்பட்டுவருகிறது. மடத்தின் இடதுபுறம் விநாயகர் சிலை உள்ளது. இந்த சிலை வைக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் எனஅப்போதைய மன்னர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு சான்றாக, விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்வதுடன், நெய் தீபம் ஏற்ற வேண்டும் என்று மன்னர் சாசனத்திலும்குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்துக் கோவில்களில் சமாதிகளுக்கு பூஜை நடத்துவதில்லை. பிரம்ம ஞானிகள் இறந்த இடத்தில் கோவில்கள் கட்டி இந்துக்கள் வழிபடுவதுபுதிய விஷயம் அல்ல. பழனி கோவில் கூட சித்தர் போகரின் சமாதி மீதுதான் கட்டப்பட்டுள்ளது.
சங்கர மடத்தில் ஆதிசங்கரரின் நேரடி சிஷ்யரான இரண்டாவது மடாதிபதி சுரேஷ் ஆச்சார்யாவின் சமாதி இருக்கிறது. அங்கு பூஜைகளும்,ஆராதனைகளும் நடந்து வருகின்றன. காஞ்சி மடத்தின் 68வது மடாதிபதியான சந்திரசேகரேந்திர சுவாமிகளின் சிலை இருப்பதுஎல்லோருக்கும் தெரியும். இந்த மடம் குரு, சிஷ்யர் பாரம்பரியத்தில் வந்தது.
இந்து அறநிலையத்துறையின் மூலம் கோவில்கள் மட்டும் எடுக்கப்பட்டு பராமரிப்பது வழக்கம். அப்படி இருக்க பாம்பன் சுவாமி சமாதியைஅரசு ஏன் எடுத்தது? காஞ்சி மடத்தில் யார் இருந்தாலும், இல்லையென்றாலும் பூஜைகள் நடக்கும் என்று தமிழக அரசே ஏற்கனவேதெரிவித்துள்ளது.
இதன் மூலம் அங்கு பூஜைகள் நடந்து வருவது உறுதியாகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற விளக்கம் உயர் நீதிமன்றத்திலும் கலவை மடத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications