For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் ரெளடி வெட்டிக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிறையிலிருந்து விடுதலையாகி வந்த ரெளடியை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தது.

சென்னை வண்ணாரப்பேட்டையைைச் சேர்ந்தவன் தாமஸ் (வயது 35). அப் பகுதி பிரபல ரெளடியான இவன் மீது வண்ணாரப்பேட்டைகாவல் நிலையத்தில் 38 வழக்குகள் உள்ளன.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தாமஸ் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த வழக்கிலிருந்து டிசம்பர் 7ம் தேதி விடுதலையானான்.

விடுதலையான தாமஸ், நேற்று ஏழுகிணறு பகுதியில் உள்ள தனது மருமகன் கிரியின் வீட்டுக்கு வந்தான். வீட்டில் யாரும் இல்லாததால், அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றான்.

அப்போது 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்தது. தாமஸை கடைக்குள்ளேயே வைத்து அக் கும்பல் சரமாரியாக வெட்டித் தள்ளியது.

படுகாயமடைந்த தாமஸை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் இறந்து விட்டார். இந்ததுணிகரக் கொலை தொடர்பாக யானைக்கவுனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பழிக்குப் பழி வாங்கவே இந்தக் கொலை நடந்துள்ளதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X