மருத்துவமனையில் இருந்து கலாம் டிஸ்சார்ஜ்
டெல்லி:
மருத்துமனையில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று இருந்து டிஸ்சார்ஜ்செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்சியின்போது வழுக்கி கீழே விழுந்ததில், வலது தோள்பட்டையில் அவருக்கு சிறிய எலும்புமுறிவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று ராணுவ மருத்துவமனையில் அவருக்கு "closed reduction" என்ற நவீன எலும்புசிகிச்சை அளிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பதிலாக இந்த நவீன எலும்பு சிகிச்சை தரப்பட்டது.
இதையடுத்து இன்று கலாம் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்குத் திரும்பினார்.ராணுவ மருத்துவமனையை விட்டுக் கிளம்பு முன் அங்குள்ள சில நவீன ஆய்வுக் கூடங்களையும் கலாம் சுற்றிப் பார்த்தார்.
பின்னர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களுடன் சில நிமிடங்கள் பேசிய கலாம் அவர்களுக்கு நன்றிதெரிவித்து கொண்டார். மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது சிகிச்சைக்காக வந்திருந்த சில குழந்தைகளுடனும்கலாம் பேசிவிட்டே சென்றார்.
அவர் வேகமாக உடல் நலம் தேறி வருவதாகவும், அவருக்கு சில பிஸியோதெராபி பயிற்சிகள் அளிக்கப்பட இருப்பதாகவும்கலாமின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எலும்பு முறிவுக்கு நவீன முறை சிகிச்சை அளிக்கப்பட்டதால் கலாமுக்கு கட்டு ஏதும் போடப்படவில்லை.
துணை ஜனாதிபதி ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் நேற்று கலாமைமருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications