தமிழக உளவுத்துறை அதிகாரிகள் மாற்றம்
சென்னை:
தமிழக காவல்துறை உளவுப் பிரிவு கண்காணிப்பாளராக சிவனாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக உளவுப் பிரிவில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த ராமானுஜம் கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று, அதே துறையில் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுப்பிரிவில் டிஜிபியாக இருந்த அலெக்ஸாண்டர் தமிழக காவல்துறைத் தலைவராகிவிட்டார். இதனால் அந்தத் துறையை ஐஜியாக இருந்தராமானுஜம் தான் கவனித்து வந்தார். இப்போது அவருக்கு கூடுதல் டிஜிபி பதவி கிடைத்துள்ளது.
அதேபோல் குற்றப்பிரிவு ஐ.ஜியாக இருந்த அமித்வர்மா கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றார். அவர் குற்றப்பிரிவு ரகசிய போலீஸ்பிரிவின் கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குண்டுவெடிப்பு வழக்குகள், நக்ஸல்கள், தீவிரவாதிகள் ஆகிய மிக சென்சிட்டிவான விவகாரங்களைக் கண்காணிக்கும் கியூ பிரிவின்எஸ்.பியாக இருந்த சிவனாண்டி உளவுத் துறை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதுவரை உளவுத்துறை எஸ்.பியாக இருந்த கந்தசாமி கியூ பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைசெயலாளர் பவன் ரெய்னா இன்று வெளியிட்டார்.
சிவனாண்டி, சசிகலாவின் ஆடி பெற்றவராவார்.












Click it and Unblock the Notifications