தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை:
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குநராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், சென்னை மண்டல மீன் வளத்துறையின்கூடுதல் இயக்குநர் பதவிக்குப் மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்துத் துறை துணை செயலாளராக இருந்த பங்கஜ் குமார் பன்சால்,நாகப்பட்டினம் மண்டல மீன் வளத்துறை கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராக இருந்த நசிமுதீன், குழந்தை நலமேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்இயக்குநராக இருந்த பிந்துமாதவன், மாநில திட்டகமிஷன் செயல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய்த்துறை சிறப்பு செயலாளராக இருந்த தீபக் ஜெயின், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகநியமிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியராக இருந்த ராமமூர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின்தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருக்கும் பிரகாசுக்கு கூடுதல் பொறுப்பாக தூத்துக்குடி மண்டல மீன்வளத்துறையின் கூடுதல் இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.