ரகுவுக்கு குண்டாஸ்: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் ரகு கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில் ரகு கைதானதை எதிர்த்து விஜயேந்திரரின் இன்னொரு சகோதரரான பிரபாகர் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம், நீதிபதி ராமலிங்கம் ஆகியோர், ரகு ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பதுகுறித்து 1 மாதத்தில் விளக்கம் அளிக்கக் கோரி காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் தனிப்படை போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டனர்.
ரகுவின் ஜாமீன் மனு தள்ளுபடி:
அதே நேரத்தில் குண்டர் சட்டத்தில் கைதான தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி ரகு தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள்தள்ளுபடி செய்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications