அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி
சென்னை:
தமிழக வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரித் தாமஸ் கமிட்டியின் அறிக்கை நகலை எதற்காக கேட்கிறீர்கள் என்றுகேட்டு அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பெருமளவிலான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுப்போயிருந்தன. இதுதொடர்பாக கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ் விசாரணை நடத்தினார்.
இந்த அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் நகலை அதிமுக கேட்டுள்ளது.
மக்களளைத் தேர்தலில் முறைகேடு நடந்ததால் தான் அதிமுக தோற்றதாகவும், இதனால் தமிழகத்தில் நடந்த தேர்தலை ரத்துசெய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தக் கோரி வழக்குத் தொடரப் போவதாகவும் அதிமுக கூறியுள்ளது.
இதற்காக தாமஸ் நடத்திய விசாரணையின் அறிக்கை தேவைப்படுவதாகவும் அதிமுக கூறியுள்ளது.
இந் நிலையில் மத்திய துணைத் தேர்தல் ஆணையர் ஏ.என்.ஜா டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விசாரணைக் கமிஷன் அறிக்கை நகலைத் தருமாறு அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. எதற்காக நகலை கேட்கிறீர்கள் என்றுஅந்தக் கட்சிக்கு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம்.
நாடு முழுவதும் தற்போது வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலமாகத்தான் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில்தமிழகத்தில் மட்டும் வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக கோருவதை ஏற்பது கடினம் என்றார்ஜா.












Click it and Unblock the Notifications