எளிய தமிழில் வெளிவரும் ஸ்ரீரங்கம் "கோயிலொழுகு" நூல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலின் வரலாறு, அங்கு பின்பற்றப்படும் நடைமுறைகள், பூஜை விவரங்கள்உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அடங்கிய "கோயிலொழுகு" நூல் அனைவருக்கும் புரியும் வகையில் எளியதமிழில் வெளியிடப்படவுள்ளது.
ஸ்ரீரங்கம் கோவில் நடைமுறைகள், தல வரலாறு, பூஜை விவரங்கள் ஆகியவை தற்போது மணிப்பிரவாள மொழிநடையில் உள்ளது. இது மணிப்பிரவளா மொழி நடை அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். மற்றவர்கள் இதைப்படித்தறிவது கடினம்.
இதை மாற்றி, அனைவருக்கும் புரியும் வகையில், எளிய தமிழில் ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ நிறுவனம் எழுதிஅச்சிட்டுள்ளது.
இதனை ஸ்ரீரங்கம் கோவில் ஆராய்ச்சியாளரான கிருஷ்ணமாச்சாரியார் எழுதியுள்ளார்.
இந் நூல் மார்ச் 25ம் தேதி வெளியிடப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தின் பெருமைகள், சதாத்யமி, தசாத்யமி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் இடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications